Friday 3rd of May 2024 05:38:44 PM GMT

LANGUAGE - TAMIL
-
வடமராட்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா!

வடமராட்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா!


யாழ்ப்பாணம் வடமராட்சியில் உயிரிழந்த முதியவர் மற்றும் இளைஞர் ஆகியோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை, குச்சம் ஒழுங்கையைச் சேர்ந்த செங்கல்வரதராசா சக்திவேல் (வயது 76) என்ற முதியவர் நேற்றைய நாள் வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போது உயிரிழந்திருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை,

பருத்தித்துறை, முதலாம் கட்டைச் சந்திப் பகுதியில் மரக்காலையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சண்முகராஜா துஷ்யந்தன் (வயது 21) என்ற இளைஞருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE